Thursday, May 31, 2018

மஹதீரா.....


மஹாதீரா…

உமது பெயரிலேயே அடங்கியுள்ளதையா வெற்றிக்கான அடைமொழி. 
முதல் முறையாக மீண்டும் உமது பெயர் உச்சரிக்கப்பட்டபோது எத்தனை ஜோடி கண்கள் அகல விரிந்து உமது முகத்தில் புதைந்திருக்கும் சுருக்கங்களை எண்ணிப் பார்த்தன.
வயது அறுபதைத் தொட்டதும் முடிந்தது வாழ்க்கை என்று முடங்கிப் போக எண்ணும் முகத்திரையைக் கிழித்து தொல்லைகள் அறுக்க தொடர்ந்து வந்த உமது பாதங்களுக்கு, உம்மைப் பழித்துக் காட்டிய உதடுகள்  முத்தமிட்டுச் செல்ல வேண்டும்.
 வயது ஒரு வரம்பல்ல என்று நெற்றிப் பொட்டில் சுத்தியலால் அடித்தது நீர் வீறு கொண்ட வெற்றி.
உமக்கு வயதாகி விட்டதா! 
யார் சொன்னது!
நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த எண்ணங்களும் வாள் கொண்டு நின்றதையா இத்தேசத்தில் சூல் கொண்ட துன்பத்தை வெட்டி வீழ்த்த. 
பாவங்களை சுட்டுப் போட்ட உமது கர்ஜனை இன்று வேலி கட்டி நிற்கின்றது மக்களுக்குக் காவலாய்.
புதிய சாம்ராஜ்யம் உருவாக்க மீண்டும் முளைத்து வந்த ஆலமரம் நீ. 
இந்நாட்டு சரித்திரத்தைப் புரட்டிப் போட்ட சாணக்கியன் நீ. 
நீரே இந்நாட்டின் உந்துசக்தி.

இறைவனுக்கு ஒரு வேண்டுகோள்!

இறைவா, எங்கள் தந்தைக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்து அவரைக் காக்க வேண்டும். இந்நாட்டு மக்களின் கண்ணீரைத் துடைக்க எழுந்து அல்லும் பகலும் பாடுபடுகின்ற அவருக்கும் வயதுக்குத் தேவையான உடல் வலி இருக்கும். அந்த வலி மட்டுமல்ல, எந்த வலியும் அவரைத் தொடராமல் காத்தருள வேண்டும்.

No comments:

Post a Comment