யோசிக்கிறேன்.
நீங்கள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். என் ஞாபகக்கூட்டில் சிக்கவில்லை. ஆனால் என் மழலைப் பருவத்தை நீங்கள் பிறரிடம் சொல்லி பூரித்துப் போகும் போதெல்லாம் என் மனம் மத்தாப்புக் கொளுத்தி விளையாடியுள்ளது. நீங்கள் எந்த சட்டை தைத்தாலும் மீதத் துணியில் எனக்கும் ஒரு கவுன் தைத்து போட்டு அழகு பார்ப்பீர்கள். என்னையும் தம்பிகளையும் ஒன்றாக அமர வைத்து உணவளிப்பீர்கள். எனக்குக் கோபம் வந்தால் உணவு வேண்டாம் என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைப்பீர்கள். அதில் நீங்கள் மிகவும் மிடிவாதமாய் இருந்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் யாராவது 'என் பிள்ளை உணவு வேண்டாம் என்று கூறிவிட்டது, அதனால் விட்டுவிட்டேன்' என்று கூறும்போது உங்களை அழைத்துவந்து அவர்களுக்கு ஓர் அறை விட சொல்ல வேண்டும்போல் எனக்குத் தோன்றும். நான் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஒரு நாள் மோட்டார் சைக்கில் மோதி கீழே விழுந்துவிட்டேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபப்படுவீர்கள் என்று எண்ணி நீண்ட பாவாடை அணிந்து சிராய்ப்புக் காயங்களை மறைத்துக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு யாரோ சொல்லக்கேட்டு பதறி ஓடிவந்து 'ஏன் சொல்லவில்லை' என்று கூறியவாறே என் காயங்களுக்கு மருந்து போட்டபோதுதான் உங்கள் கண்டிப்புக்கு நடுவில் பாசம் புறையோடிப்போயிருப்பதை உணர்ந்தேன். அந்த அழகான நாட்களின் ஆராதனை எனக்குள் இன்னும் சாயம் போகவில்லை அம்மா. நான் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். அதுவும் ஞாபகத்தில் இல்லை. நிச்சயம் உங்களுக்கு ஞாபகத்தில் இருந்திருக்கும். யோசிக்கிறேன்.. நிச்சயம் ‘அம்மா’ என்ற வார்த்தைக்காகத்தான் என் இதழ்கள் முதன் முதலில் குவிந்திருக்கும். நான் உங்களிடம் பேசிய கடைசி வார்த்தையும் அம்மா! அம்மா! அம்மா!..தான்.
நீங்கள் என்னிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். என் ஞாபகக்கூட்டில் சிக்கவில்லை. ஆனால் என் மழலைப் பருவத்தை நீங்கள் பிறரிடம் சொல்லி பூரித்துப் போகும் போதெல்லாம் என் மனம் மத்தாப்புக் கொளுத்தி விளையாடியுள்ளது. நீங்கள் எந்த சட்டை தைத்தாலும் மீதத் துணியில் எனக்கும் ஒரு கவுன் தைத்து போட்டு அழகு பார்ப்பீர்கள். என்னையும் தம்பிகளையும் ஒன்றாக அமர வைத்து உணவளிப்பீர்கள். எனக்குக் கோபம் வந்தால் உணவு வேண்டாம் என்று முரண்டு பிடிக்கும் போதெல்லாம் என்னைக் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைப்பீர்கள். அதில் நீங்கள் மிகவும் மிடிவாதமாய் இருந்திருக்கிறீர்கள். இப்போதெல்லாம் யாராவது 'என் பிள்ளை உணவு வேண்டாம் என்று கூறிவிட்டது, அதனால் விட்டுவிட்டேன்' என்று கூறும்போது உங்களை அழைத்துவந்து அவர்களுக்கு ஓர் அறை விட சொல்ல வேண்டும்போல் எனக்குத் தோன்றும். நான் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது ஒரு நாள் மோட்டார் சைக்கில் மோதி கீழே விழுந்துவிட்டேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபப்படுவீர்கள் என்று எண்ணி நீண்ட பாவாடை அணிந்து சிராய்ப்புக் காயங்களை மறைத்துக் கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு யாரோ சொல்லக்கேட்டு பதறி ஓடிவந்து 'ஏன் சொல்லவில்லை' என்று கூறியவாறே என் காயங்களுக்கு மருந்து போட்டபோதுதான் உங்கள் கண்டிப்புக்கு நடுவில் பாசம் புறையோடிப்போயிருப்பதை உணர்ந்தேன். அந்த அழகான நாட்களின் ஆராதனை எனக்குள் இன்னும் சாயம் போகவில்லை அம்மா. நான் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை என்னவாய் இருக்கும். அதுவும் ஞாபகத்தில் இல்லை. நிச்சயம் உங்களுக்கு ஞாபகத்தில் இருந்திருக்கும். யோசிக்கிறேன்.. நிச்சயம் ‘அம்மா’ என்ற வார்த்தைக்காகத்தான் என் இதழ்கள் முதன் முதலில் குவிந்திருக்கும். நான் உங்களிடம் பேசிய கடைசி வார்த்தையும் அம்மா! அம்மா! அம்மா!..தான்.
நீங்கள் என்னிடம் பேசிய
கடைசி வார்த்தையையும் யோசிக்கிறேன். ‘ வீட்டுக்குப் போகலாம்’ என்று என் கண்களை நேருக்கு
நேர் பார்த்து சொன்னதுதான் கடைசி வார்த்தை. உங்கள் கடைசி வார்த்தையை பூர்த்தி செய்யும்
ஆற்றலை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி அம்மா. என் வாழ்க்கையின் அஸ்த்திவாரத்தை ஆழமாய் ஊன்றி வைத்து
உரமிட்டது நீங்கள்தான் அம்மா. உங்கள் வியர்வை எங்கள் வாழ்க்கை. எதையும் தைரியத்துடன்
எதிர்கொள்ளும் ஆற்றலை எனக்கு அள்ளித் தந்ததும் நீங்கள்தான் அம்மா. பாசத்தைப் பகிர்ந்து கொள்ள எனக்குச் சொல்லிக்கொடுத்ததும் நீங்கள்தான் அம்மா. அம்மா என்றால் அன்பு
என்பர். ஆனால் எனக்கு உங்களது அன்பு மட்டுமல்ல கண்டிப்பும்தான்
கண்முன் விரிகிறது. என்னிடம் உள்ள பண்புகளை எண்ணி நான் கர்வப்பட்டதுண்டு. என்
கர்வத்தின் சான்றிதழே நீங்கள்தான் என்றெண்ணும் போது காலம் கரைத்துச் சென்றது உங்கள்
உடலை மட்டும்தான் என்பது எனக்குப் புரியாமலில்லை.
No comments:
Post a Comment